அரஃபா தினத்தின் சிறப்புகள்!
அரஃபா தினத்தின் சிறப்புகள்! பாவமன்னிப்பு! அரஃபா தினத்தின் மாலைப் பொழுதில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மத்தின் பாவமன்னிப்பிற்காக நீண்ட நேரம் துஆ செய்தார்கள். அல்லாஹ் அதற்கு உடனே செவி சாய்த்தான். நாயகமே தங்களது கோரிக்கையை நான் ஏற்று கொண்டேன். அதே நேரம் அவர்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு செய்த அநியாயத்தை தவிர. பாதிக்க பட்டவன் மன்னித்தாலே தவிர.என்று அல்லாஹு சொல்லிவிட்டான். மீண்டும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யா அல்லாஹ் நீ நினைத்தாள் பாதிக்கப்பட்டவனுக்கு நன்மையை வழங்கிவிட்டு அநீதம் செய்தவனை மன்னிக்கலாமே என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த கோரிக்கைக்கு அப்போது பதில் கிடைக்க வில்லை ஆனாலும் நபிகளார் விடவில்லை. மறுநாள் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அல்லாஹ் அதையும் ஏற்று கொண்டான்.நபியே உங்கள் உம்மத்திற்கு மன்னிப்பு வழங்கி விட்டேன் என்றான். மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகம் மலர்ந்தார்கள். தோழர்கள் நாயகமே என்றுமில்லாத ஆனந்தமும் சிரிப்பும் உங்களின் முகத்தில் தெரிகிறதே காரணம் என்ன? என்று கேட்டார்கள். உடனே மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம