Posts

Showing posts from January 6, 2013

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

                                        بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ  ۚ  وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.{49:10} அன்று இவ்வுலகில் இஸ்லாம் பரவிய பல காரணங்களில் ஒன்று சத்திய ஸஹாபாக்கள் தங்களுக்கு மத்தியில்  சகோதரத்துவத்தோடு வாழ்ந்தது தான். இன்று இஸ்லாமை பற்றி தவறாக பேசப்படும் பல  காரணங்களில் ஒன்று நாம் நமக்கு  மத்தியில்  சகோதரத்துவத்தோடு வாழாதது தான். அன்று நாயகம் ஏற்படுத்திய  சகோதரத்துவத்தின் மூலம் இஸ்லாம் பரவியது.  இன்று  நமக்கு  மத்தியில்  சகோதரத்துவம் எற்படாததின் மூலம் முஸ்லிம்களே மதம் மாறும் அவநிலையை பார்க்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு கொருக்குபேட்டையில் சில முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டதாக பத்திரிக்கையில் பரவலாக வந்ததையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் கூட்டம் கூட்டமாக சென்று கேட்ட போது ந