Posts
Showing posts from 2015
ரமளானின் ரஹ்மத்துகள்!
- Get link
- Other Apps
بسم الله الرحمن الرحيم சந்கைமிகுந்த ரமலான் நம்மை அலங்கரிக்க வந்திருக்கிறது. ரமலான் என்றாலே நம் உள்ளத்தில் ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுகிறது. இது தான் ஈமானிய உணர்வு ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்து முதல் பத்தில் அ ல்லாஹ்வின் ரஹ்மத்தையும் , இரண்டாம் பத்தில் பாவ மன்னிப் பையும் , மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும் வல்ல நாயனிடம் மன்றாடி கேட்க வேண்டுமென நபி { ஸல் } அவர்கள் கூறுவார்கள் . ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவனுடைய வாழ்வில் அல்லாஹ்வின் அருள் என்பது மிகவும் ஆளுமைக்குரிய ஒன்றாகும் . ஈருலகிலும் அல்லாஹ்வின் அருள் அவனைச் சூழ்ந்திருக்க வேண்டு மென அவன் ஆசிப்பதும் , நேசிப்பதும் ஈமானுக்கு அடுத்த படி மிக முக்கியமான ஒன்றாகும் . மேன் மக்களான அறிஞர் பெருமக்கள் சொல்வார்கள் : “ ஓர் இறை நம்பிக்கையாளன் நேர்வழியில் நடப்பதற்கும் , வெற்றிக்கான வாழ்க்கை வாழ்வதற்கும் , சீதேவித்தனம் நிலைத்திருப்பதற்க