Posts

Showing posts from September 8, 2013

மாற்றார்களோடு மாநபி (ஸல்)

                                   بسم الله الرحمن الرحيم    وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ  ۚ  وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ  ۖ  وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரைவிட்டு வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக! அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.(8:30) சமீபகாலமாக முழு உலகத்திலும், நம் இந்தியாவிலும் இஸ்லாத்திற்கு எதிராக பல விதமான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது. இஸ்லாத்தினுடைய அபரிவிதமான வளர்ச்சியை பார்த்து போருக்க முடியாமல் சில இஸ்லாமிய எதிரிகள் ஊடகங்களிலும், இனய தளங்களிலும் இஸ்லாமிய சட்டங்களை பற்றியும், குர்ஆனை  பற்றியும், பெருமானார் (ஸல்) அவர்களை  பற்றியும், அவ்வப்போது அவதூறு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.   இவர்களுக்கு நாம் எப்படி பதில் சொல்வது? அவர்கள் எந்த ரீதியில் ந