இந்தியாவில் இஸ்லாமிய பாரம்பரியம்!
நாம் செய்யும் எல்லா செயல்களும், நாம் பேசும் எல்லா பேச்சிக்களும், நாம் கேட்கும் எல்லா செய்திகளும் நம் உள்ளத்தில் பதிந்து விடுவது கிடையாது. மாறாக சில நேரங்களில் நாம் செய்த செயல்கள், சில நேரங்களில் நாம் பேசிய பேச்சிக்கள், சில நேரங்களில் நாம் கேட்ட செய்திகள் மட்டும் தான் நம் உள்ளத்தில் பதிந்திருக்கும். எனவே தான் ரப்புல் ஆலமீன் சஹாபாக்களின் உள்ளங்களில் திரு குர்ஆன் மிக ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காக திரு குர்ஆனை மற்ற வேதங்களை போன்று முழுமையாக இறக்கி வைக்காமல் அவர்களின் செயல்களுக்கு தக்கவாறு கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகளில் இறக்கி வைத்தான். அந்த அடிப்படையில் தான் இன்று நாம் (இந்தியாவில் இஸ்லாமிய பாரம்பரியம்) என்ற தலைப்பின் கீள் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். இன்று (ஆகஸ்ட் 15) இந்தியாவிள் 68 வது சுதந்திர தின விழாவை செங்கோட்டை முதல் சென்னை கோட்டை வரை மிக கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ் முஸ்லிம்கள் இந்த கொண்டாட்டத்திற்கோ இந்த சந்தோஷத்திற்கோ எதிராவர்கள் இல்லை. மாறாக இந்த கொ