இல்லறம் இன்பமாக!
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக வழிகாட்டியாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.(25:74) இல்லற வாழ்க்கை என்பது இவ்வுலகின் சுவர்க்கம் என்று சொல்லலாம். எனவே தான் எல்லா நபிமார்களின் வழிமுறையாக அல்லாஹ் அதை ஆக்கினான். ஆன்மிகம் என்ற ஒரு உன்னத பாதையை நாம் அடைய வேண்டுமேரால் அதற்கு நமது ஷரீஅத்தில் கண்டிப்பாக திருமணம் முடித்திருக்க வேண்டும் என்பது அல்லாஹ் ரஸூலின் கூற்று. ஆனால் அந்த திருமண வாழ்வு இன்று நம்மில் அநேகர்களுக்கு கசப்பாகத்தான் இருக்கிறது.ஏனென்றால் திருமண வாழ்கையின் இன்பங்களை நமக்கு சரியாக சொல்லிதரவில்லை என்பதுதான் உண்மை. ஏதோ வயதாகி விட்டது என்பதால் தான் இன்று திருமணம் செய்து வைக்க படுகிறதே ஒழிய அவர்களுக்கு திருமணத்தின் சட்டதிட்டங்கள் ஒன்றுமே தெர