வறுமையை ஒழிப்போம்!
بسم الله الرحمن الرحيم إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் நன்மை, தீமைகளில் அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம் எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். (36:12) பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த சண் மார்கத்தை அந்த அரேபிய தீபகற்பத்தில் அறிமுக படுத்துவதற்கு முன்புவரை அந்த மக்கள் பெரும் பெரும் பாவங்களை மிக சர்வசாதரணமாக செய்து கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. ஆனால் இன்று அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற மாபெரும் நல்லடியார்கள். அவர்களை போன்று இனி உலகம் அழியும் வரை யாரும் ஆக முடியாது என்ற அளவில் அல்லாஹ்விடத்தில் உயர்ந்திருக்கிறார்கள். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது ? நமது நாயகம் அவர்கள் மீது உழைத