அல்லாஹ்வை முழுமையாக நம்புவோம்
بسم الله الرحمن الرحيم أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ ۚ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۚ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًا سُخْرِيًّا ۗ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ உமது இறைவனின் ரஹ்மத்தை இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம். இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம். உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.(43:32) இவ்வுலகில் படைக்கப்பட்ட மனிதர்களில் யாருமே தன் விருப்பத்திற்கிணங்க படைக்க படவில்லை. அது ஆண்கள் ஆண்களாக படைக்கப்பட்டதும், பெண்கள் பெண்களாக படைக்கப்பட்டதும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிறம் கிடைத்ததும் தோற்றம் கிடைத்ததும் அல்லது உயரமாகவும்,குட்டையாகவும் அவர்களாக தேர்ந்தெடுக்க முடியாது. அதேபோல நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க