குற்றம் இல்லா தேசம்
இன்று தமிழகத்தில் மிக அதிகமாக நடந்து கொண்டிருப்பது கொலை,கொள்ளை குறிப்பாக நாடு முழுக்க நடக்கும் கொடூரம் பெண்களை கற்பழிப்பது. மூன்று வயது பெண் குழந்தையையும் கற்பழிக்கிறார்கள் முதுமை அடைந்த பெண்களையும் கற்பழிக்கிறார்கள். தினமும்செய்தி தாள்களிலும், மீடியாக்களிலும் நாம் மனம் நொந்து படித்து கொண்டும், பார்த்து கொண்டும் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இந்த கொடுமை நடந்து கொண்டு இருப்பதையும் மீடியாக்கள் அதை மோசமான வார்த்தைகளால் சித்தரிப்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த அனைத்து கற்பழிப்புகளும் மக்களுக்கு தெரிந்திருந்தும் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பை மட்டும் உலக அரங்கில் பேசவைத்து டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த காரணம் என்ன? மாணவர்களின் ஆர்பாட்டங்கள் , முற்றுகைகள் , அரசியல்வாதிகளின் போராட்டங்கள், அண்ணாஹசாரேவின் போராட்டம் ஒரு பக்கம் வழக்கம் போல ராம்தேவின் ஆக்டிங் ஒரு பக்கம் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு போலீஸ்காரரின் உயிர் பிரிய காரணமாக இருந்திருக்கிறது. ஒரு கால் இதுவும் கூட அரசியல் வாதிகளின் நாடகமோ என்று நினைக்க தோன்றுகிறது. மும்பை தாஜ் ஹோட்டல் தாக்க