பொறுப்புகளை உணர்வோம்!
بسم الله الرحمن الرحيم إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். இஸ்லாமிய மார்க்கம் மிக உன்னதமான மார்க்கம். எல்லா வித சிறப்புகளும் உயர்வுகளும் நிறைந்த மார்க்கம். ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ் மாக உயர்ந்தவன், அவனது ரஸூலும் மிக கண்ணியமானவர்கள், அவனது மார்க்கமும் மிக சிறப்பானது. அது போல் இந்த மார்க்கத்தை தனதாக்கி கொண்ட முஸ்லிம்களும் சிறந்தவர்கள். எனவே முஸ்லிம்களின் செயல்கள் இந்த மார்க்கத்தின் சிறப்பை தகர்த்து விட கூடாது. அல்லாஹ் ரஸூலின் கண்ணியத்திற்கு இழுக்காக முஸ்லிம்களின் செயல்கள் இருக்க கூடாது. சத்திய சஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் உயர்வுக்காக தன்னையே அற்பணம் செய்தார்கள்.