Posts

Showing posts from December 30, 2012

வேண்டாம் இந்த கோபம்

                                 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ               அல்லாஹ் மனிதர்களை மிக அழகாக படைத்திருப்பதாக குர்ஆனிலே  சொல்கிறா ன். அழகாக படைதிருப்பதென்ரால்!வெறும் உடல் அமைப்பை அல்லது  தோற்றத்தை மட்டும்  அல்ல.   மனிதனுடை பார்வையை, மனிதனுடைய என்னத்தை,  மனிதனுடை சிந்தனையை, எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனுடைய குணத்தை அழகாக படைத்திருக்கிறான் என்று கருத்து. உலகில் படைக்கப்பட்ட எல்லோருமே அல்லாஹ்வால் அழகாக படைக்கப்பட்டவர்கள் தான் ஆனால் நாம் தான் நம்முடைய ஊருக்கேற்றவாரும், காலத்திற்கேற்றவாரும், சூல்னிலைகெற்றவாரும் நம்மை மாற்றி கொள்கிறோம். உலகில் படைக்கப்பட்ட மற்ற படைப்புக்களை விட நம்மை சிறப்பாகவும், உயர்வாகவும் படைக்க என்ன கரணம்? நாம் இந்த உலகில் வாழும் காலம் முழுக்க நல்ல விஷயங்களை சிந்தித்து,  நல்ல விஷயங்களை பார்த்து,  நல்ல விஷயங்களை பேசி,  நல்ல விஷயங்களை செயல்படுத்தி, நற்குண வாதிகளாக வாழ்ந்து அதன் மூலம் அல்லாஹ்வின் அன்பை பெற்று நாளை மறுமையில் சுவனத்தை அடைவதற்கான முன் ஏற்பாடுதான் இது. எனவே இவ்வுலகில் நம் சிந்தனையும், சொல்லும், செயலும் சீராகுவதற்கு முதலில் நம் குணங்கள்