ரமலானையும் ரமலானில் செய்யும் அமல்களையும் பாதுகாப்போம்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(2:183) ரப்புல் ஆலமீன் நம்மீது நிறைய கிருபைகள் செய்திருக்கிறான் அதன் காரணமாகத்தான் நாம் நல் அமல்களை அதிகம் செய்கிறோம், அமல்களின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம். அல்லாஹ்வினுடைய அன்பை பெற்று தரும் காரியங்களில் அதிகம் ஈடுபடுகிறோம். இது போன்ற சந்தர்பங்களை அல்லாஹ் எல்லோருக்கும் கொடுத்துவிடுவதில்லை. நம்முடைய செல்வங்களை வைத்தோ, ஆற்றல்க ளை வைத்தோ, திறமைக ளை வைத்தோ இது போன்ற நல் அமல்களை செய்யவும் முடியாது. அல்லாஹ் யாரின் மீது நலவை நாடுவானோ அவர்களுக்கு மட்டும் தான் இது போன்ற பாக்கியங்களை தருவான். நாம் எந்த அமலை செய்வதாக இருந்தாலும் அதற்கு அல்லாஹ்வின் தவ்ஃபீக் தேவை. அந்த தவ்ஃபீகை அல்லாஹ் யாருக்கு விரும்புகிறானோ அவர்